No icon

Pope Francis

அவரின் உற்றுநோக்கு நம் இதயங்களுக்குச் செல்கிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

 

இயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணி, ஏப்ரல் 11, சனிக்கிழமை உரோம் நேரம் மாலை ஐந்து மணிக்கு, தூரின் நகர் பேராலயத்தில் பொது மக்களுக்குத் திறக்கப்படுவதை முன்னிட்டு, இயேசுவின் திருமுகம் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார்.

காயங்களால் உருக்குலைந்துள்ள திருமுகம், மாபெரும் அமைதியை வெளிப்படுத்துகிறது. விசுவாசம் கொள்ளுங்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனச் சொல்வதுபோல், அவரின் உற்றுநோக்கு, நேரிடையாக, நம் கண்களுக்கு அல்ல, மாறாக, நம் இதயங்களுக்குச் செல்கிறது, கடவுளின் அன்பின் சக்தி, உயிர்த்த ஆண்டவரின் வல்லமை, எல்லாப் பொருள்களையும் விஞ்சி நிற்கிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், #HolyShroud என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாயின.

Comment